
புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் லக்ஷ்மன்கர்கில் உள்ள கபன்வாடா கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித் சிங் சவுத்ரி. 22 வயதான இவர் ரஷ்யாவின் உபா நகரத்தில் உள்ள பாஷ்கிர் ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டியில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் எம்பிபிஎஸ் படித்து வருகிறார்.
பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த இவர் கடந்த அக்டோபர் 19-ம் தேதி காலை 11 மணி அளவில் பால் வாங்குவதற்காக வெளியில் சென்றார். அதன் பின் விடுதிக்கு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

