
புதுடெல்லி: ரூ.4,100 கோடியில் இலகு ரக பன்னோக்கு ஏவுகணை வாங்க இங்கிலாந்து நிறுவனத்துடன் இந்திய ராணுவம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியா வந்திருந்தார். மும்பையில் பிரதமர் நரேந்திர மோடியும் ஸ்டார்மரும் சந்தித்துப் பேசினர். அப்போது, பாதுகாப்புத் துறை உட்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை பலப்படுத்துவது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

