1947-ஆம் ஆண்டு இந்திய விடுதலைக்குப் பின்னர், ஜவஹர்லால்நேரு தலைமையிலான முதல் அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த கோவை ஆர்.கே.சண்முகம் செட்டியார். இந்தியாவின் முதல் நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இவர் நீதிக்கட்சியைச் சார்ந்தவர். கோவையில் பிறந்தாலும் கொச்சி சமஸ்தானத்தில் திவானாக இருந்தார். அதேபோல டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி நல்ல கல்வியாளர், கல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார். நேரு அமைச்சரவையில் வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சராகப் பணியாற்றினார். பன்முகத் தன்மை உடையவர்.