
எவ்வளவுதான் திறமையைக் காட்டி நிரூபித்தாலும் சிலருக்கு இப்போதெல்லாம் இந்திய அணியில் புதிதாக இடம் கிடைப்பதோ அல்லது தன்னை நிரூபித்த வீரர்கள் மீண்டும் அணிக்குத் திரும்புவதோ நிச்சயமற்றதாகி விடுகிறது. முகமது ஷமி இப்போது லேட்டஸ்ட் பலி ஆடாகியுள்ளார்.
ரஞ்சி டிரோபி 2025–26 தொடரில் ஷமி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்படியும் அவரை இந்தியா ஏ அணிக்குத் தேர்வு செய்யவில்லை, இப்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர் தேர்வு செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளார். இதுவரை மூன்று போட்டிகளில் அவர் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி, பெங்காலை உத்தராகண்ட் மற்றும் குஜராத் அணிகளுக்கு எதிராக வெற்றி பெறச் செய்தார். இத்தகைய ஆட்டத்தையும் பொருட்படுத்தாமல் தேர்வுக்குழு அவரை மீண்டும் புறக்கணித்துள்ளது. அஜித் ஆகார்கர் தலைமையிலான தேர்வுக்குழு ஷமியின் ‘மேட்ச் ஃபிட்ட்னஸ்’ குறித்த சந்தேகங்களையே காரணமாகக் கூறியுள்ளதாகத் தெரிகிறது.

