டெல் அவிவ்: அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பின்னரே காசா அமைதி ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என்று இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.
காசாவில் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான அமைதி ஒப்பந்தம் அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பின்னரே நடைமுறைக்கு வரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. இன்று மாலையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே 72 மணி நேர கவுண்டவுன் தொடங்கும் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.