லீட்ஸ்: தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற அயலக மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வது ஐபிஎல் வெற்றியை காட்டிலும் பெரியது என இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனான ஷுப்மன் கில் கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று (ஜூன் 20) லீட்ஸ் நகரில் தொடங்குகிறது. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், அவர்கள் இல்லாமல் இந்திய அணி விளையாட உள்ள முதல் டெஸ்ட் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.