வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வேறு எந்த நாட்டுக்கும் இல்லாத வகையில் இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்துள்ளார். இதனால் இரு நாடுகளுக்கிடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், தேபோரா ராஸ் மற்றும் ரோ கண்ணா தலைமையிலான அமெரிக்க எம்.பி.க்கள் 21 பேர் அதிபர் ட்ரம்புக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாக உள்ளது.