Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்களால் சர்ச்சையில் சிக்கிய கிரிக்கெட் வீரர் அஸ்வின்!
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்களால் சர்ச்சையில் சிக்கிய கிரிக்கெட் வீரர் அஸ்வின்!

EDITOR

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் அருவிக்கரையில் தடைசெய்யப்பட்ட பாறைக்கூட்டத்தில் அஸ்வின் தனது நண்பர்களுடன் குளித்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அண்மையில் பெய்த மழையால் பறளியாற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ளதாக பாறைக்கூட்டம் பகுதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ள நிலையில், அங்கு கிரிக்கெட் வீரர் அஸ்வின் குளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருவிக்கரையில் பறளியாறு ஓடுகிறது. பாறைகளின் கூட்டத்தின் மீது ஓடும் பறளியாறு தண்ணீர் அனைவரின் மனதை கொள்ளையடிக்கும் கட்சியாக அமைந்துள்ளது. இந்த இடத்தில் பல்வேறு திரைப்படங்கள் படமாக்கப்பட்டுள்ளன.

மேலும் சமூக ஊடகங்களின் மூலமாக பறளியாற்றின் இயற்கை அழகை பதிவிட்டு வருவதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அப்பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது நண்பர்களுடன் அருள்வாய்மொழி வழியாக அருவிகாரைக்கு வந்துள்ளார். அங்கு பாறைகளின் கூட்டத்தின் இடையே பறந்தோடும் பறளியாற்றில் குளித்து மகிழ்ந்துள்ளார். மேலும் அவர் இதுதொடர்பான படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பறளியாறு பகுதியில் பெய்து வரும் மழை காரணமாகவும், பேச்சிப்பாறை அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் காரணமாகவும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் பறளியாற்றில் குளித்து இதுதொடர்பான படங்களை சமூக ஊடகத்தில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இது தடை விதிக்கப்பட்ட பகுதி என்பதால் அஸ்வினை போல பொதுமக்கள் யாரும் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்களால் சர்ச்சையில் சிக்கிய கிரிக்கெட் வீரர் அஸ்வின்! appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • ‘எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர்; இதில் குழப்பமே இல்லை’ – அண்ணாமலை உறுதி
  • ‘விசிக, இடதுசாரிகளுக்கு இபிஎஸ் விரித்திருப்பது ரத்தினக் கம்பளம் அல்ல…’ – திமுக ரியாக்‌ஷன்
  • “என்னை விசாரிக்காமல் சஸ்பெண்ட் செய்ய எப்படி பரிந்துரைக்க முடியும்?” – டிஎஸ்பி சுந்தரேசன்
  • ‘ட்ரம்ப் குறிப்பிட்ட அந்த 5 ஜெட் விமானங்கள் பற்றிய உண்மை என்ன?’ – மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி
  • போர் காரணமாக உக்ரைனில் குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு: ஐ.நா தகவல்
  • கடலுக்கடியில் வெடிக்க தயாராகும் எரிமலைகள் – மனிதர்களுக்கு அச்சுறுத்தலா?

You Might Also Like

கொரோனா தொற்று வீரியம் இல்லாததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவையில்லை: அமைச்சர் மா.சு.

June 20, 2025

சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டியது

June 26, 2025

எந்த வழக்காக இருந்தாலும் பரவாயில்லை குற்றவாளிகளை தேவையின்றி இரவில் ஸ்டேஷனுக்கு கொண்டு வர வேண்டாம்: போலீசாருக்கு பறந்த புதிய உத்தரவு

July 2, 2025

பொற்பனைக்கோட்டையில் 2ம் கட்ட அகழாய்வு நிறைவு: 1982 தொல் பொருட்கள் கண்டெடுப்பு

July 16, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?