சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் சீட் கேட்டு ஆதரவாளர்கள் தொடர்ந்து அழுத்தம் தரும் நிலையில், கடந்த காலங்களைப் போல் இல்லாமல் குறைந்தபட்சம் 40 இடங்களையாவது பெறும் முனைப்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இருப்பதாகக் கூறப்படு கிறது.
தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. ஆளும் கட்சியான திமுக, இத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைப்பதற்கான முனைப்புடன் செயலாற்றி வருகிறது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு தொகுதியின் நிர்வாகிகளையும் நேரடியாக சந்தித்து கள நிலவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.