பிரிட்ஜ்டவுன் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான நேற்று மேற்கு இந்தியத் தீவுகள் ஓரளவுக்கு மீண்டு முதல் இன்னிங்ஸில் 190 ரன்களை எடுத்து ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 10 ரன்கள் முன்னிலைப் பெற்றது. பிறகு ஆஸ்திரேலியாவை 2-வது இன்னிங்ஸில் பிரமாதமான பந்து வீச்சில் திணறச் செய்து அந்த அணியை 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 92 ரன்கள் என்று முடக்கியுள்ளது. அதாவது, ஆஸ்திரேலிய அணி, மேற்கு இந்தியத் தீவுகளில் 10 ரன் முன்னிலையைக் கழித்தால் 82 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்று உள்ளது.
இரண்டாம் நாளில் 10 விக்கெட்டுகள் சாய்ந்தன. ஆட்ட முடிவில் டிராவிஸ் ஹெட் 13 ரன்களுடனும், பியூ வெப்ஸ்டர் 19 ரன்களுடனும் கிரீசில் இருக்கின்றனர். இந்த டெஸ்ட் விறுவிறுப்பான நிலையில் உள்ளது, ஆனால் டெஸ்ட் எப்படி முடியும் என்ற கணிக்க முடியாத நிலை உள்ளது. ஆஸ்திரேலியா இன்னும் ஒரு 150-200 ரன்களைச் சேர்க்க முடிந்தால் மே.இ.தீவுகள் சேஸ் செய்வது இந்தப் பிட்சில் மிக மிகக் கடினம். மாறாக ஆஸ்திரேலியா இன்று 3-ம் நாளில் 150 ரன்களுக்குச் சுருண்டால் மே.இ.தீவுகளுக்கு ஒரு அரிய வெற்றி வாய்ப்பு உள்ளது.