புதுடெல்லி: காசாவில் போரை நிறுத்தியதற்காக இஸ்ரேல், எகிப்து நாடுகள், தங்கள் நாடுகளின் மிக உயரிய விருதுகளை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு வழங்கவுள்ளன.
காசாவிலிருந்து பிணைக்கைதிகளை விடுவிப்பதிலும், போரை முடிவுக்குக் கொண்டு வருவதிலும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆற்றிய பங்குக்காக, நாட்டின் மிக உயர்ந்த குடிமகன் விருதை வழங்குவதாக இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் அறிவித்தார்