டகார்: பர்கினோ பாசோவில் புலானி என்ற இனத்தை சேர்ந்தவர்கள் பரவலாக வசித்து வருகின்றனர். இவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளை ஆதரிப்பதாக அரசு நீண்டகாலமாக குற்றம்சாட்டி வருகின்றது. இந்நிலையில் மார்ச் மாதம் புலானி இனத்தை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சுமார் ஏராளமானவர்கள் இதில் பலியாகி உள்ளனர். இது தொடர்பாக மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு கூறுகையில், பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்கள், சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோக்களின் அடிப்படையில் தாக்குதல் நடத்தியது அரசு படைகள் என்பது உறுதியாகிறது. இந்த தாக்குதலில் சுமார் 100 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது. ஆனால் இந்த அறிக்கைகளுக்கு பர்கினோ பாசோத அதிகாரிகள் உடனடியாக எந்த பதிலும் கூறவில்லை.
The post அப்பாவி பொதுமக்கள் 100 பேர் படுகொலை: பர்கினோ பாசோ நாடு மீது மனித உரிமைகள் அமைப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.