Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: தருமபுரி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 50,000 கன அடியில் இருந்து 57,000 கன அடியாக அதிகரிப்பு
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

தருமபுரி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 50,000 கன அடியில் இருந்து 57,000 கன அடியாக அதிகரிப்பு

EDITOR


தருமபுரி: நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தருமபுரி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 50,000 கன அடியில் இருந்து 57,000 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பால் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருகிறது. பரிசல் சவாரிக்கும், அருவியில் குளிக்கவும் 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது .

காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது அதிகரிக்கப்பட்டுள்ளது. கேரளா, கர்​நாடகா மாநில காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் பெய்​து​வரும் கனமழை​யால் கர்​நாடக மாநிலத்​தில் உள்ள கபினி, கிருஷ்ண​ராஜ சாகர் அணை​கள் வேக​மாக நிரம்பி வரு​கின்​றன. அணை​களின் பாது​காப்பு கருதி உபரிநீர் காவிரி ஆற்​றில் திறந்து விடப்​படு​கிறது.

இதனால், தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி ஆற்​றில் நீர்​வரத்து படிப்​படி​யாக அதி​கரித்து வரு​கிறது. நேற்று முன்​தினம் மாலை​ 16,000 ஆயிரம் கனஅடி​யாக இருந்த நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 32,000 கனஅடி​யாக​வும், மாலையில் 50,000 கனஅடி​யாக​வும் உயர்ந்​தது. இதனால் ஒகேனக்​கல் பிர​தான அருவிக்கு செல்​லும் நடை​பாதை தண்​ணீரில் மூழ்​கி​யுள்​ளது. மேலும், பிர​தான அருவி உள்​ளிட்ட இடங்​களில் வெள்​ளம் ஆர்ப்​பரித்து ஓடு​கிறது.

வெள்​ளப்​பெருக்கு காரண​மாக ஒகேனக்​கல் காவிரி ஆற்​றில் பரிசல் இயக்க தடை விதித்து மாவட்ட ஆட்​சி​யர் சதீஷ் உத்​தர​விட்​டுள்​ளார். மேலும், ஆற்​றி​லும், அருவி​களி​லும் குளிக்க 3 நாட்​களுக்கு முன்பு அறிவிக்​கப்​பட்ட தடை​யும் தொடர்ந்து அமலில் உள்​ளது. மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் காலை விநாடிக்கு 7,815 கன அடி​யாக​வும், மாலை 13,332 கனஅடி​யாக​வும் இருந்த நீர்​வரத்து நேற்று காலை 18,290 கனஅடி​யாக​வும், மாலை 37,263 கனஅடி​யாக​வும் அதி​கரித்​தது.

The post தருமபுரி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 50,000 கன அடியில் இருந்து 57,000 கன அடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • புதுவை கடற்கரை ரோந்து பணியில் முதல்முறையாக ரோபோ!
  • கர்நாடகா: பெண்கள் உட்பட 100 உடல்களை புதைத்ததாக கூறும் நபர் – எழும் கேள்விகள் என்ன?
  • பெருங்குடி சர்வீஸ் சாலையில் திடீர் பள்ளம்: சீரமைப்பு பணி தீவிரம்
  • ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார், லாரி, அரசுப் பேருந்து என 8 வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில் 4 பேர் உயிரிழப்பு
  • தமது மூத்த சகோதரர் மு.க.முத்து மறைவுக்கு ஆறுதல் கூறிய கேரள முதல்வருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி
  • இந்தியாவில் கடந்த 30 ஆண்டாக திருநங்கை வேடத்தில் காலம் தள்ளிய வங்கதேச நபர் கைது: உளவுத்துறை போலீசார் விசாரணை

You Might Also Like

குற்றாலத்தில் சாரல் திருவிழா வரும் 19ம் தேதி தொடங்குகிறது: ஆட்சியர் அறிவிப்பு

July 9, 2025

இந்தியாவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையின் புதுமை: 2 மருத்துவமனைகளுக்கு இடையே இணை மாற்ற அறுவை சிகிச்சை

July 19, 2025

செங்கல்பட்டு மாவட்டத்துக்கு ஜூலை 28ல் உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

July 16, 2025

ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் சப்ளை செய்யும்போது கடை முன் எடை போட்டு பதிவு செய்யக்கோரி வழக்கு: ஒன்றிய, தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

June 26, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?