
தஞ்சாவூர்: நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என விவசாயிகள் யாரும் புகார் தெரிவிக்கவில்லை என்றும், மத்திய அரசை காப்பாற்ற அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தான் பொய்யான தகவல்களை கூறி வருவதாகவும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை, தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு அனுப்பும் பணியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்றிரவு பார்வையிட்டார்.

