Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
  • தொலைக்காட்சி
  • பாலிமர் நியூஸ் டிவி
  • நியூஸ் 7 டிவி
  • மக்கள் டிவி
  • தலைப்பு செய்திகள்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • வணிகம்
  • கல்வி
  • யூடியூப் சேனல்கள்
  • Puthiya Boomi Tamil
  • செய்தி பிரிவுகள்
  • செய்தித்தாள்கள்
  • நியூஸ் பேப்பர்
  • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Reading: போர் நிறுத்த அறிவிப்புக்கு பின்னர் ஜம்மு, பஞ்சாபில் பறந்த பாக். ட்ரோன்கள்: முறியடித்த ராணுவம்; இன்று எல்லையில் அமைதி
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
  • தொலைக்காட்சி
  • பாலிமர் நியூஸ் டிவி
  • நியூஸ் 7 டிவி
  • மக்கள் டிவி
  • தலைப்பு செய்திகள்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • வணிகம்
  • கல்வி
  • யூடியூப் சேனல்கள்
  • Puthiya Boomi Tamil
  • செய்தி பிரிவுகள்
  • செய்தித்தாள்கள்
  • நியூஸ் பேப்பர்
  • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Have an existing account? Sign In
Home » Blog » போர் நிறுத்த அறிவிப்புக்கு பின்னர் ஜம்மு, பஞ்சாபில் பறந்த பாக். ட்ரோன்கள்: முறியடித்த ராணுவம்; இன்று எல்லையில் அமைதி
Dinakaran India

போர் நிறுத்த அறிவிப்புக்கு பின்னர் ஜம்மு, பஞ்சாபில் பறந்த பாக். ட்ரோன்கள்: முறியடித்த ராணுவம்; இன்று எல்லையில் அமைதி

EDITOR
Last updated: May 13, 2025 10:33 am
EDITOR
Published May 13, 2025
Share
SHARE

புதுடெல்லி: போர் நிறுத்த அறிவிப்புக்கு பின்னர் ஜம்மு, பஞ்சாபில் பாகிஸ்தான் ட்ரோன்கள் பறந்த நிலையில், அவற்றை ராணுவம் முறியடித்தது. இன்று காலை முதல் எல்லையில் அமைதியான சூழல் உள்ளது. பஹல்காம் பதிலடி தாக்குதலுக்கு பின்னர் நேற்று ஜம்மு – காஷ்மீரின் சம்பா மாவட்டம் மற்றும் பஞ்சாபின் ஜலந்தர் ஆகிய இடங்களில் சர்வதேச எல்லையை ஒட்டிய பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான ட்ரோன்கள் கண்டறியப்பட்டன. இந்திய பாதுகாப்புப் படைகள் உடனடியாக இந்த ட்ரோன்களை எதிர்கொண்டு, சம்பா பகுதியில் செயல்பட்டு வரும் வான்வழித் தாக்குதல் அமைப்புகளைப் பயன்படுத்தி அவற்றை முறியடித்தன.

ஜலந்தரில் மந்த் கிராமத்திற்கு அருகே ஒரு கண்காணிப்பு ட்ரோன் இரவு 9.20 மணியளவில் பாதுகாப்புப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த சம்பவங்கள் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றங்களுக்கு மத்தியில் நிகழ்ந்தன. ஆனால் ராணுவ வட்டாரங்கள் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என உறுதியளித்தன. ட்ரோன்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, சம்பா, கதுவா, ரஜோரி, மற்றும் ஜம்மு உள்ளிட்ட பகுதிகளில் முழுமையான மின்தடை (பிளாக்அவுட்) அமல்படுத்தப்பட்டது.

பஞ்சாபின் ஜலந்தர் மற்றும் ஹோஷியார்பூர் பகுதிகளிலும் முன்னெச்சரிக்கையாக மின்தடைக்கு உத்தரவிடப்பட்டது. இந்திய வான்பாதுகாப்பு அமைப்புகள் துரிதமாக செயல்பட்டு, சம்பவத்தை கட்டுக்குள் கொண்டுவந்தன. மேலும், மாதா வைஷ்ணோ தேவி கோயில் பகுதியிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் அதிகரிக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகள் ஆபரேஷன் சிந்தூருக்கு பின்னர் பாகிஸ்தானால் தொடரப்பட்ட ட்ரோன் நடவடிக்கைகளுக்கு பதிலடியாக கருதப்படுகின்றன.

இன்று காலை நிலவரப்படி, சம்பா மற்றும் ஜலந்தர் பகுதிகளில் நிலைமை அமைதியாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானின் ட்ரோன்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக இருந்ததாகவும், அவை பெரிய அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை எனவும் ராணுவ வட்டாரங்கள் கூறியுள்ளன. இந்தியா – பாகிஸ்தான் இடையே சமீபத்தில் ஏற்பட்ட போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிறகு, எல்லையில் பதற்றம் குறைந்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும், எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக உள்ளன. மேலும் பொதுமக்களுக்கு அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post போர் நிறுத்த அறிவிப்புக்கு பின்னர் ஜம்மு, பஞ்சாபில் பறந்த பாக். ட்ரோன்கள்: முறியடித்த ராணுவம்; இன்று எல்லையில் அமைதி appeared first on Dinakaran.

Share This Article
Facebook Email Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • GDPR
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?