இந்தியாவில் இல்லாமல் அமெரிக்காவில் ஐபோன்களை உற்பத்தி செய்யத் தொடங்கினால் அதன் விலை 3,000 அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கும் என்று இத்துறையைச் சேர்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது, தற்போதைய விலையான 1,000 அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்குடன் பேசியதாகவும், இந்தியாவில் ஆப்பிளின் விரிவாக்கத்தை கட்டுப்படுத்துமாறு கேட்டுக்கொண்டதாகவும் கூறியதைத் தொடர்ந்து இந்த எதிர்வினைகள் எழுந்துள்ளன.