உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள பி.ஆர்.கவாய், அவரது சொந்த ஊரான மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் நடந்த பாராட்டு விழாவில் நாடாளுமன்றத்தின் அதிகாரம் குறித்து பேசியிருப்பது நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
‘‘இந்தியாவில் அரசியல் சாசனம் தான் உச்சகட்ட அதிகாரம் படைத்தது. நாடாளுமன்றத்திற்கு சட்டங்களை திருத்துவதற்கு வேண்டுமானால் அதிகாரம் இருக்கலாம். ஆனால், அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பை மாற்ற முடியாது. அரசு நிர்வாகம் (Executive), சட்டம் இயற்றும் அவைகள் (Parliament), நீதித்துறை (Judiciary) ஆகிய மூன்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் இயங்குபவை. மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதும் நீதித்துறையின் கடமை’’ என்று பேசியுள்ளார்.