புதுடெல்லி: கடந்த 2020-ம் ஆண்டு ஜூனில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக் கில் இந்திய, சீன ராணுவ வீரர் களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதன்காரணமாக இரு நாடுகள் இடையிலான உறவில் மிகப்பெரிய விரிசல் விழுந்தது. தரைவழி வர்த்தக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இரு நாடுகளும் வர்த்தகரீதியாக பரஸ்பரம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. இதன்படி சீனாவில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட உரங்கள், அரிய வகை தனிமங்கள், சுரங்கங்களை தோண்டும் இயந்திரங்களின் விநியோகம் நிறுத்தப்பட்டது.