புதுடெல்லி: அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து கடந்த மாதம் 12-ம் தேதி லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 241 உட்பட மொத்தம் 270 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் உயிர்பிழைத்தார்.
சர்வதேச விமான போக்குவரத்து இயக்க விதிமுறைகளின்படி விபத்து நடைபெற்ற 30 நாட்களுக்குள், விபத்து குறித்து முதல்கட்ட அறிக்கையை இந்தியா வெளியிட வேண்டும்.