ஐ.சி.எஃப். ஆலையில் தயாரிக்கப்பட்ட நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில், சென்னையில் இருந்து ஹரியானாவுக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது. இந்த ரயிலை, அடுத்த சில மாதங்களுக்கு பல்வேறு கட்ட சோதனையில் ஈடுபடுத்த உள்ளனர்.
உலக புகழ்பெற்ற ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையான சென்னை ஐ.சி.எஃப் ஆலையில், வந்தே பாரத் ரயில், எல்எச்பி பெட்டிகள் கொண்ட ரயில், மெட்ரோ ரயில், அம்ரித் பாரத் ரயில் உள்பட பல்வேறு ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன.