புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்கள், 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் வாகனங்களுக்கு நேற்று முதல் எரிபொருள் வழங்கப்படவில்லை. தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகமாக இருப்பதில் வாகனங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனால் பழமையான வாகனங்கள் டெல்லியில் இயக்கப்படுவதை தடுத்து நிறுத்த காற்றுத் தர மேலாண்மை ஆணையம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. 10 ஆண்டு பழமையான டீசல் வாகனங்கள், 15 ஆண்டு பழமையான பெட்ரோல் வாகனங்கள் ஆயுள் முடிந்தவையாக கருதப்பட்டு அவைகள் தேசிய தலைநகர் மண்டலத்தில் (என்சிஆர்) இயக்கப்படுவதை தடுக்க உத்தரவிட்டது.