நாகர்கோவில் சட்டப்பேரவை தொகுதியில் கடந்த தேர்தலில் திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனை தோற்கடித்து பாஜகவின் மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி வெற்றி பெற்றார்.
வரும் தேர்தலில் திமுகவில் மீண்டும் சீட் பெற முதல்வர் குடும்ப நண்பர் என்ற நெருக்கத்தில் சுரேஷ் ராஜன் காய்நகர்த்தி வருகிறார். அதேநேரம் நாகர்கோவில் மாநகராட்சி மேயராக இருக்கும் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மகேஷ், தேர்தலில் சீட் பெற தீவிரம் காட்டி வருகிறார். அவர், தனது சொந்த தொகுதியான நாகர்கோவிலில் போட்டியிடும் வகையில் மாநகராட்சியின் 52 வார்டு பகுதிகளிலும் வளர்ச்சி பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.