மும்பை: இஸ்ரேல்-ஈரான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதையடுத்து மத்திய கிழக்கில் பதற்றம் தணிந்து ஸ்திரத்தன்மை திரும்பியுள்ளது. இதனை பிரதிபலிக்கும் விதமாக, இந்திய பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் விறுவிறுப்புடன் நடைபெற்றது.
உள்நாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளில் நம்பிக்கையுடன் முதலீட்டை அதிகரித்ததையடுத்து வங்கி, மோட்டார் வாகன துறை பங்குகளுக்கு அதிக தேவை காணப்பட்டது. பணவீக்கம் குறைவு, பணப்புழக்கம் அதிகரிப்பு போன்றவையும் சந்தையின் ஏற்றத்துக்கு ஆதரவாக அமைந்தன.