புதுடெல்லி: ‘மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை இயற்றியது வீண் வேலை. இந்த புதிய சட்டங்கள் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் காவல் துறையினரிடையே நீதி நிர்வாகத்தில் குழப்பத்தை மட்டுமே ஏற்படுத்தியுள்ளது’ என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்தார்.
இது குறித்து ப.சிதம்பரம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சுதந்திரத்திற்குப் பிறகு கொண்டுவரப்பட்ட மிகப் பெரிய சீர்திருத்தங்களே மூன்று புதிய குற்றவியல் சட்ட மசோதாக்கள் என்று மத்திய அரசு பலமுறை கூறி வருகிறது. ஆனால் உண்மையிலிருந்து எதுவும் வெகு தொலைவில் இருக்க முடியாது. மூன்று மசோதாக்களை ஆய்வு செய்த நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு நான் ஓர் எதிர்ப்புக் குறிப்பை அனுப்பியிருந்தேன். அது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் ஒரு பகுதியாகும்.