
சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.7) ஒரு பவுன் ரூ.90,000-ஐ நெருங்கி உள்ளது. இந்தப் புதிய உச்சம், மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்கம் விலை தொடர் உயர்வுக்கான காரணத்தை பார்ப்போம்.
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு, உக்ரைன் – ரஷ்யா போர், இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை அமைகிறது.

