புதுடெல்லி: வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் (செப்.15) நிறைவு பெறுகிறது. இதற்கான அவகாசம் நீட்டிக்கப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
2025- 26ம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் (ஐடிஆர்) செய்வதற்கான காலக்கெடுவை மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்துள்ளதாக வாட்ஸ்அப், சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இதுபோன்ற எந்த உத்தரவும் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பதை நிதி அமைச்சக அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.