Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
  • தொலைக்காட்சி
  • பாலிமர் நியூஸ் டிவி
  • நியூஸ் 7 டிவி
  • மக்கள் டிவி
  • தலைப்பு செய்திகள்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • வணிகம்
  • கல்வி
  • யூடியூப் சேனல்கள்
  • Puthiya Boomi Tamil
  • செய்தி பிரிவுகள்
  • செய்தித்தாள்கள்
  • நியூஸ் பேப்பர்
  • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Reading: திருவனந்தபுரம் அருகே லாரி மீது பைக் மோதி 3 வாலிபர்கள் பலி
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
  • தொலைக்காட்சி
  • பாலிமர் நியூஸ் டிவி
  • நியூஸ் 7 டிவி
  • மக்கள் டிவி
  • தலைப்பு செய்திகள்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • வணிகம்
  • கல்வி
  • யூடியூப் சேனல்கள்
  • Puthiya Boomi Tamil
  • செய்தி பிரிவுகள்
  • செய்தித்தாள்கள்
  • நியூஸ் பேப்பர்
  • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Have an existing account? Sign In
Home » Blog » திருவனந்தபுரம் அருகே லாரி மீது பைக் மோதி 3 வாலிபர்கள் பலி
Dinakaran India

திருவனந்தபுரம் அருகே லாரி மீது பைக் மோதி 3 வாலிபர்கள் பலி

EDITOR
Last updated: May 17, 2025 7:33 am
EDITOR
Published May 17, 2025
Share
SHARE

*காப்பாற்ற சென்ற வாலிபர் வேறொரு விபத்தில் இறந்தார்

திருவனந்தபுரம் : திருவனந்தபுரம் அருகே லாரி மீது பைக் மோதி 3 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர். விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற முயன்ற ஒரு வாலிபர் வீட்டுக்கு பைக்கில் திரும்பிச் செல்லும் வழியில் மின்கம்பத்தின் மீது மோதி பரிதாபமாக இறந்தார்.திருவனந்தபுரம் அருகே பெரும்பழுதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் அகில் (19), சாமுவேல் (20), அபின் (19). 3 பேரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர்.

நேற்று முன்தினம் இரவு 3 பேரும் சாப்பிடுவதற்காக பைக்கில் பாலராமபுரத்திற்கு சென்றனர். ஓட்டலில் சாப்பிட்ட பின்னர் நள்ளிரவு சுமார் 11.45 மணியளவில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.பாலராமபுரம் அருகே மடவூர்ப்பாறை பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்தில் நிறுத்தியிருந்த லாரி மீது பைக் மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். உடனே அந்த பகுதியினர் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அகில், சாமுவேல், அபின் ஆகிய 3 பேரும் பரிதாபமாக இறந்தனர். இதற்கிடையே விபத்து நடந்தபோது அந்த வழியாக வந்த தான்னிவிளை பகுதியை சேர்ந்த மனோஜ் (26) என்பவரும் மீட்புப் பணியில் ஈடுபட்டார். பின்னர் பைக்கில் அவர் வீட்டுக்கு சென்றார். மடவூர்ப்பாறை-தான்னிவிளை ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்கம்பத்தின் மீது பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த மனோஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

The post திருவனந்தபுரம் அருகே லாரி மீது பைக் மோதி 3 வாலிபர்கள் பலி appeared first on Dinakaran.

Share This Article
Facebook Email Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • GDPR
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?