புதுடெல்லி: பாகிஸ்தான் நாட்டு தூதரக அதிகாரி ஒருவரை அடுத்த 24 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு மத்திய அரசு கெடு விதித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 அப்பாவி இந்தியர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவப் படைகள் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தின.
இதைத் தொடர்ந்து இந்தியா மீது பல இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை நடத்தியது. இதற்குப் பதிலடி தரும்விதமாக இந்திய பாதுகாப்புப் படையும் தாக்குதலைத் தொடர்ந்தது. 4 நாட்கள் நடந்த போருக்குப் பின்னர் போரை நிறுத்துவதற்கு 2 நாடுகளும் ஒப்புக்கொண்டன.