
பாட்னா: பிஹாரில் ஜன் சுராஜ் வேட்பாளர்கள் 3 பேர் தங்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற்றுள்ளனர். இதற்கு பாஜக.,வின் அச்சுறுத்தல் காரணம் என ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டியுள்ளார்.
பிஹார் சட்டப் பேரவை தேர்தல் அடுத்த மாதம் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்நிலையில் ஜன் சுராஜ் கட்சியின் 3 வேட்பாளர்கள் முதுர் ஷா, சத்ய பிரகாஷ் திவாரி, சசி சேகர் சின்ஹா ஆகியோர் தங்கள் வேட்பு மனுவை திரும்ப பெற்றுள்ளனர். இதுகுறித்து ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:

