திருமலை: திருமலையில் உள்ள அன்ன மைய்யா பவனில் திருப்பதி தேவஸ்தானம் மற்றும் ஆந்திர மாநில இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாநில அறநிலைய துறை அமைச்சர் ஆனம் ராம்நாராயண ரெட்டி, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் அமைச்சர் ஆனம் ராம்நாராயண ரெட்டி பேசியதாவது: முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உத்தரவின் பேரில், வேதம் படித்து வேலை தேடும் இளம் வேதபண்டிதர்கள் மாநிலத்தில் 590 பேர்உள்ளனர். இவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகையாக ரூ.3000 வழங்கப்பட உள்ளது. திருப்பதி ஸ்ரீவாணி அறக்கட்ட ளைக்கான நிதியில் விஜயவாடா கனகதுர்க்கையம்மன் கோயி லுக்கு செல்ல மேலும் இரு வழி சாலைகள் அமைக்க நிதிஒதுக்கும்படியும் திருப்பதி தேவஸ்தானத்தை கேட்டுள்ளோம்.