அடையாறு ஆற்றில் தண்ணீரே தெரியாத அளவில் ஆகாயத் தாமரை ஆக்கிரமித்துள்ளது. அவற்றை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பால் நீரோட்டம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூரில் தொடங்கி மண்ணிவாக்கம், முடிச்சூர், வரதராஜபுரம், ராயப்பா நகர், திருநீர்மலை, அனகாபுத்தூர், காட்டுப்பாக்கம், மணப்பாக்கம் வழியாக சென்னை கோட்டூர்புரம் அருகே அடையாறு ஆறு பட்டினப்பாக்கம் பகுதியில் கடலில் கலக்கிறது.