மதுரை: “அதிமுக- பாஜக கூட்டணி குறித்து 15 நாட்களுக்கு பின்பு கருத்து தெரிவிப்பேன்” என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் ரூ.72 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று (ஏப்.14) அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மதுரை மேற்கு சட்டபேரவைத் தொகுதிக்கு உட்பட்ட 72 வது வார்டு பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்ட சாலைக்கு அமைச்சர் மூர்த்தி மீண்டும் பூமி பூஜை போட்டுள்ளார். அதிகாரிகள் சொல்லி அமைச்சர் பூமிபூஜை நடத்தியுள்ளார்.