அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சார கூட்டங்களில் ஆம்புலன்ஸ் நுழைவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தமிழக அரசியல் இதுவரை கண்டிராத புதிய வடிவம். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது தான் எடப்படி பழனிச்சாமி இந்த விவகாரத்தை கிளப்பி வைத்தார்.
‘‘நான் பிரச்சாரம் செய்யும் இடங்களிலெல்லாம் வேண்டுமென்றே நோயாளி யாரும் இல்லாத ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளே நுழைந்து இடையூறு செய்கின்றன. இனி அப்படி நடந்தால், ஆம்புலன்ஸ் ஓட்டுநரையே நோயாளியாக்கி அனுப்புவோம்’’ என்று எச்சரித்தார். அவரது பேச்சு தொண்டர்களை உணர்ச்சிவயப்பட வைத்துவன்முறையில் ஈடுபடுத்தும் என்பதில் சந்தேகமில்லை.