புதுடெல்லி: தற்போதைய பாதுகாப்புச் சூழல் மற்றும் தாக்குதல் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், சிவில் பாதுகாப்புச் சட்டம் மற்றும் விதிகள் 1968-ன் கீழ் சிவில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கும்படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
சிவில் பாதுகாப்பு சட்டம் 1968-ன் பிரிவு 11-ஐ சுட்டிக்காட்டி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பாதுகாப்பை அதிகரித்தல் என்ற தலைப்பில் உள்துறை அமைச்சகம் எழுதியிருக்கும் கடிதத்தில், மக்கள் மற்றும் சொத்துகளின் பாதுகாப்புக்காகவும், எதிரிகளின் தாக்குதலின்போது அத்தியாவசிய வசதிகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. உள்துறை அமைச்சகம் எழுதியிருக்கும் கடிதத்தில், ‘தற்போது நிலவிவரும் தாக்குதலுக்கான அச்சுறுத்தல் சூழலில், சிவில் பாதுகாப்பு சட்டம் 1968 பிரிவு 11-ல் உங்களின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறோம். இது மமாநில அரசுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க அதிகாரம் வழங்குகிறது.