
வாஷிங்டன்: எச்1பி விசாவில் அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டு நிபுணர்கள் மூலம் அமெரிக்கர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இதன்பின் எச்1பி விசாதாரர்கள் அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தற்காலிகமாக பணியாற்றுவோருக்கு எச்1பி விசா வழங்கப்படுகிறது. இதற்கான கட்டணத்தை ரூ.1.32 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக அமெரிக்க அரசு அண்மையில் உயர்த்தியது. இதன் மூலம் அமெரிக்க நிறுவனங்களில் வெளிநாட்டு நிபுணர்கள் பணியில் சேருவதை தடுக்க மறைமுகமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. சமீபத்திய புள்ளிவிவரத்தின்படி எச்1பி விசா பெறுவோரில் சுமார் 75% பேர் இந்தியர்கள் ஆவர்.

