டெக்சாஸ்: செப்டம்பர் 10 ஆம் தேதி டல்லாஸ் மோட்டலில் இந்திய வம்சாவளி நபர் ஒருவர் கொடூரமாகக் கொல்லப்பட்டார். 50 வயதான சந்திரமௌலி நாகமல்லையா எனும் நபர், வாக்குவாதத்தால் ஏற்பட்ட தகராறில் அவரது மனைவி மற்றும் மகன் முன்னிலையில் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
டெக்சாஸின் டெனிசன் கோல்ஃப் மைதானத்திற்கு அருகில் இன்டர்ஸ்டேட் 30 இல் அமைந்துள்ள டவுன்டவுன் சூட்ஸ் மோட்டலில் இந்த கொடூர சம்பவம் நடந்தது. இந்தக் கொலை சம்பந்தமாக டல்லாஸ் காவல்துறையினர் யோர்டானிஸ் கோபோஸ்-மார்டினெஸ் என்பவரை கைது செய்தனர். அவர் பிணையில் வெளிவர முடியாத வகையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.