இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், அதை 50 சதவீதமாக உயர்த்தி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதனால், இந்திய தொழில் துறையில் எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு என்பதைப் பார்ப்போம். குறிப்பாக, தமிழகத் தொழில் துறையில் ஏற்படக்கூடிய பின்னடைவு பற்றியும் பார்ப்போம்.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, இந்தியா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்துவதாக அறிவித்ததுடன் 10 சதவீத அடிப்படை கட்டணத்தையும் ட்ரம்ப் விதித்தார். இந்தியா மீது 25 சதவீத வரி விதிப்பு ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டது. இந்த அறிவிப்பின்போதே ‘ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்தாவிட்டால், கூடுதல் அபராதம் விதிக்கப்படும்’ என்று எச்சரித்தார்.