எல்லை தாண்டி வந்து இந்திய குடிமக்களின் உயிரைப் பறித்த பாகிஸ்தானிய தீவிரவாதிகள் அங்கிருந்த மற்ற சுற்றுலா பயணிகளிடம், ‘‘போய் … இதை மோடியிடம் சொல்லுங்கள்’’ என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய தேசத்திற்குமே விடுக்கப்பட்ட கொக்கரிப்பான சவாலாகத் தான் இது பார்க்கப்பட்டது.
இந்தியா ஏன் இன்னும் பதிலடி கொடுக்கவில்லை என்று பலரும் பலவிதமான ஊகங்களை ஆதங்கத்தோடும், தவிப்போடும் வெளியிட்டு வந்த நிலையில், அதிகாலையில் இந்தியமண்ணில் இருந்து புறப்பட்ட ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்கள் பாகிஸ்தான் சீராட்டி வளர்த்து வந்த தீவிரவாத முகாம்களை துல்லியமாக அழித்தபோது தான் இந்தியாவின் பலமும் திறமையும் உலக நாடுகளுக்கு முழுமையாக புரியவந்தது.