இந்தியாவில் ஓட்டுப்பதிவை அதிகரிக்க 21 மில்லியன் அமெரிக்க டாலர்(சுமார் ரூ.181 கோடி) அளவுக்கு நிதியுதவி வழங்கியிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இந்தியாவில் ஓட்டுப்பதிவை அதிகரிக்க அமெரிக்கா ஏன் உதவ வேண்டும் என்ற கேள்விக்கு விடைதெரியாமல் நாட்டு மக்கள் குழம்பிப் போயுள்ள நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா வெளியிட்டுள்ள தகவல்கள் இன்னும் அதிர்ச்சியளிப்பவையாக அமைந்துள்ளன.