அமெரிக்கா 50 சதவீத வரி விதிப்பால் ராமநாதபுரம் மாவட்டத்தில் தினமும் ரூ.10 கோடி மதிப்பிலான இறால் ஏற்றுமதி பாதிக்கப்படும் என மீனவர்கள் அச்சப்படுகின்றனர். மத்திய, மாநில அரசுகள் மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 50 சதவீத வரி விதிப்பை அறிவித்துள்ளார். இதனால் இந்தியாவின் ஏற்றுமதி 60.2 மில்லியன் டாலர் அளவுக்கு பாதிப்புக்குள்ளாகும் என சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. இறால் ஏற்றுமதியும் கடுமையாக பாதிக்கும் என்பதால், இந்திய இறால் ஏற்றுமதி நிறுவனங்கள் அச்சமடைந்துள்ளன.