கார் ஒன்றில் செல்லும் ஒருவர், குப்பைத் தொட்டியில் இருந்து பளிச்சென ஏதோ மின்னுவதைப் பார்க்கிறார். சற்று உற்றுப் பார்த்தால் அதுவொரு அம்மிக்கல். பல வருடங்களாக அரைபட்டதில் தேய்ந்த அக்கல்லின் மீது சூரிய ஒளிபட்டதால் மின்னியிருக்கிறது என்பது அவருக்கு புலப்பட்டுவிட்டது. இப்போது அதை எடுக்க வேண்டும், டிரைவரிடம் சொன்னால் தன்னைப் பற்றி என்ன நினைப்பார் என்ற யோசனை.
காத்திருக்கிறார். ஊரடங்குகிறது. மெதுவாக சென்று குப்பைத் தொட்டியிலிருந்த கல்லை சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு வீட்டுக்கு எடுத்து வந்துவிடுகிறார். அவரது கூற்றுப்படி, உலகில் வாழும் ஜீவராசிகளின் வாழ்வியலில் ‘வேஸ்ட்’ என்ற ஒன்றே கிடையாது. ஆனால் மனிதர்கள் வாழ்க்கையில்தான் ‘வேஸ்ட்’ என்பது நிரம்பிக் கிடக்கிறது.