திருமலை: திருப்பதி அலிபிரி மலைப்பாதை வழியாக திருமலைக்கு நடந்து செல்லும் பக்தர்களுக்கு வழியில் ‘திவ்ய தரிசனம்’ டோக்கன்கள் வழங்கப்படுமா ? என பக்தர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது கோடை விடுமுறைக்காலம் என்பதால் திருப்பதியில் ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். ஆனால், அலிபிரி மலைப்பாதை வழியாக நடந்து செல்லும் பக்தர்களுக்கு மீண்டும் ‘திவ்ய தரிசனம்’ முறை அமல்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.