சென்னை: உள்நாட்டு அலுமினிய உற்பத்தி நிறுவனங்களைப் பாதுகாக்க, வெளிநாடுகளில் இருந்து மலிவான விலையில், தரம் குறைந்த அலுமினியப் பொருட்கள் இறக்குமதியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு, இந்திய அலுமினிய உருக்கு உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்திஉள்ளது.
இது தொடர்பாக, இந்திய அலுமினிய உருக்கு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஜிதேந்திர சோப்ரா சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: நாம் தினமும் 30 நிமிடங்களுக்கு ஒருமுறை அலுமினிய பொருளைப் பயன்படுத்துகிறோம். படுக்கை அறை, குளியல் அறை, சமையல் அறை, கதவு என ஒவ்வொன்றிலும் அலுமினியப் பொருட்கள் உள்ளன.