சென்னை: தமிழகத்தின் ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என பாமக, அமமுக கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழகத்தின் நிலப்பகுதிகளிலும் கடல்பரப்பிலும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்புகள் ஏற்கெனவே விடுக்கப்பட்டு, தமிழக மக்களின் கடும் எதிர்ப்புக்கு பின்னர் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான திறந்தவெளி அனுமதி கொள்கையின் 10-வது சுற்று ஏல அறிவிப்பில், தென் தமிழகத்தின் 9990.96 சதுர கி.மீ. ஆழ்கடல் பரப்பு இடம்பெற்றுள்ளது.