சென்னை: இண்டஸ்இண்ட் வங்கியின் நிதிநிலை சீராக உள்ளதாக ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது. ஊகங்களின் அடிப்படையில் வெளியாகும் தகவல்கள் பற்றி வாடிக்கையாளர்கள் கவலைப்பட வேண்டாம் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இண்டஸ்இண்ட் வங்கியின் நிதிநிலை குறித்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அண்மையில் இண்டஸ்இண்ட் வங்கிப் பங்குகள் 27.06% என்ற அளவுக்கு கடுமையான சரிவை சந்தித்தது.
The post இண்டஸ்இண்ட் வங்கியின் நிதிநிலை சீராக உள்ளதாக ரிசர்வ் வங்கி விளக்கம் appeared first on Dinakaran.