சென்னை: 'தமிழ்நாட்டில் உள்ள பொறியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும்' என ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, பரிந்துரைத்ததை அடுத்து தமிழகத்தில் மீண்டும் விவாதம் கிளம்பியுள்ளது. அவரது கருத்துக்கு திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் ஸ்ரீதர் வேம்புவின் ட்வீட்டை மேற்கோள் காட்டி, “இதுதான் வலதுசாரி பிரச்சாரத்தின் புத்திசாலித்தனம். இந்தி படிப்பது ஒரு சிறப்புரிமை என்றும் அதைப் படிக்கும் குழந்தைகளுக்கு இது பல நன்மைகளைத் தரும் என்றும் அவர்கள் சித்தரிக்க விரும்புகிறார்கள். ஆனால், இந்தியை கட்டாயமாக்குவதால் மாணவர்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படாது, மாறாக அது அவர்களுக்கு சுமையாக தான் இருக்கும்.