பெங்களூரு: இந்தியாவில் மகளிருக்கான வேலைவாய்ப்பு 48% அதிகரித்துள்ளதாக பவுண்ட்இட் (foundit) அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக பவுண்ட் இட் அமைப்பு நடத்திய ஆய் வில் கூறப்பட்டுள்ளதாவது: நடப்பு 2025-ம் ஆண்டில் இந்திய வேலைவாய்ப்புச் சந்தை யானது மகளிர் வேலைவாய்ப்புக்கானதாக இருக்கும். இந்த ஆண்டில் மகளிருக்கான வேலைவாய்ப்பு 48% அதிகரித்துள்ளது. மேலும், படித்துவிட்டு உடனடியாக வேலையில் சேரும் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும்.