சென்னை: ஓபன் ஏஐ நிறுவனம் இந்தியாவில் ‘சாட்ஜிபிடி கோ’ என்ற புதிய கட்டண சந்தாவை அறிமுகம் செய்துள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.
இந்த சந்தா திட்டத்தின் மூலம் பயனர்கள் சாட்பாட் உடன் இலவசமாக பயன்படுத்துவதை காட்டிலும் 10 மடங்கு கூடுதலாக சாட்ஜிபிடி-யை பயன்படுத்த முடியும் என ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது. அந்த வகையில் மெசேஜ் மற்றும் இமேஜ் ஜெனரேஷன் என சாட்பாட்டை தடையின்றி பயனர்கள் பயன்படுத்தலாம். கட்டணம் செலுத்தாமல் சாட்ஜிபிடி-யை பயன்படுத்தும் போது குறிப்பிட்ட வரம்பு உள்ளது. அதை பயனர்கள் கடக்கும் போது தொடர்ந்து சாட்ஜிபிடி உடன் ‘சேட்’ செய்ய முடியாது.