
இந்திய கிரிக்கெட் அணி அதன் சொந்த மண்ணிலேயே டெஸ்ட் போட்டியில் 124 ரன்கள் எடுக்க முடியாமல் தோற்று விட்டு ‘மாற்றத்தில் இருக்கிறது அணி’ என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டாதீர்கள், இந்திய ஏ அணியே தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியிருக்கும் என்று முன்னாள் இந்திய வீரர் புஜாரா சாடியுள்ளார்.
கொல்கத்தாவில் ‘ரேங்க் டர்னர்’ பிட்ச் வேண்டும் என்று கேட்டு விட்டு, பிட்சில் ஒன்றும் பெரிய பூதங்களெல்லாம் இல்லை என்றும் பேட்டர்களுக்கு டெக்னிக் பத்தாது என்றும் ஒரு பயிற்சியாளராக இருந்து கொண்டே கம்பீரினால் பேச முடிந்துள்ளது பற்றி பிசிசிஐ என்ன கருதுகிறது என்பது இன்னும் தெரியவில்லை.

