வாஷிங்டன்: இந்தியா, சீனா, பிரேசில், மெக்சிகோ, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா விதிக்க இருக்கும் பரஸ்பர வரி விகிதம் ஏப்ரல் 2ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க கூட்டு காங்கிரஸில் அறிவித்தார்.
அமெரிக்கா அதிபராக இரண்டவாது முறையாக பதவியேற்றுக் கொண்ட டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க கூட்டு காங்கிரஸில் செவ்வாய்க்கிழமை ஆற்றிய தனது முதல் உரையில், இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்கா அதிக வரிகளை எதிர்கொள்கிறது என்று தெரிவித்தார்.